இந்தியா போஸ்ட்: பான் அப்டேட் என்ற பெயரில் மோசடி.. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை..!

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி (IPPB) வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருவது தெரிந்ததே. இதேபோல், சமீபத்தில் IPPB வாடிக்கையாளர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கத் தவறினால் அவர்களின் கணக்கு முடக்கப்படும் என்று செய்திகள் (SMS) அனுப்பப்படுகின்றன.

இருப்பினும் இதுபோன்ற போலி செய்திகள் குறித்து கவனமாக இருக்குமாறு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த போலி செய்திகளில், பயனர்கள் தங்கள் பான் கார்டு தகவலை புதுப்பிக்கும்படி ஒரு இணைப்பையும் அனுப்புகிறார்கள். அதை கிளிக் செய்தால், அந்த கணக்கை பயன்படுத்தும் நபரின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சைபர் மோசடி செய்பவர்கள் திருடுவதை அரசு கண்டுபிடித்துள்ளது.

பான் விவரங்கள் புதுப்பித்தல் தொடர்பாக இந்தியா போஸ்ட் இதுபோன்ற எந்த செய்தியையும் அனுப்பவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அரசு ஆவணங்களின் விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!