ரூ.7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. அப்போது ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில், கடந்த 30ம் தேதி வரை, 97.96 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாகவும், ரூ.7,261 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.