திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இருந்து கோயிலுக்கு சென்ற பிரதமரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஏழுமலையானை தரிசித்த பின்னர், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை வழிபட்ட பிரதமருக்கு, பிரசாதங்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

அதைத் தொடர்ந்து, பிரதமருக்கு வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். பிரதமர் வருகையையொட்டி திருமலையில் மூவாயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 
 
Exit mobile version