பிரதமர் மோடி டிசம்பர் 1ம் தேதி துபாய் பயணம்

 

துபாயில் நடைபெறும் உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டிசம்பர் 1ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீதின் அழைப்பின் பேரில் பிரதமர் துபாய் செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநாட்டின் இடையே சில நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

காலநிலை சவால்களை கூட்டாக சமாளிக்கவும், ஜி20 மாநாட்டில் காலநிலை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும் இந்த உச்சி மாநாடு வாய்ப்பளிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
 
 
Exit mobile version