ராமர் கோவில் வளாகத்தை அடைந்த பிரதமர் மோடி, இன்னும் சிறிது நேரத்தில் பிரான் பிரதிஷ்டை விழா!

 

உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை விழா தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்த விழாவுக்காக ஒட்டுமொத்த தேசமும் ஆவலுடன் காத்திருக்கிறது. உத்தரபிரதேச நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில், ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலுக்கு சென்றடைந்தார். இதன்பின், ஸ்ரீராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் மழை போல் பொழிந்தது.

தற்போது பிரான் பிரதிஷ்டா மேடையில் நடைபெறும் பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவருடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் இருந்தார்.

 
Exit mobile version