இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், நீர்மூழ்கி கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்து செலுத்தத்தக்க ‘பிரமோஸ்’ சூப்பர்சானிக் குரூஸ் ஏவுகணைகளை தயாரித்துள்ளது.
இது, ஒலியின் வேகத்தைப்போல் 3 மடங்கு வேகத்தில் பாயக்கூடியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் பயன்படுத்தப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணையை நேற்று இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
