141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 22ம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு!

 

மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக எதிர்க்‍கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்‍கட்சி தலைவர்களின் கூட்டத்துக்‍கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி எம்.பிக்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

 
 
 
Exit mobile version