சமீபத்தில், தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் புதுச்சேரிக்கு பால் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்தது.
இதன் காரணமாக அடிக்கடி பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே பால் கொள்முதல் விலையை கடந்த மாதம் உயர்த்திய புதுவை அரசு, இன்று (11ம் தேதி) முதல் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியுள்ளது. அரசின் 1 லிட்டர் பாண்லே பாக்கெட் பால் ரூ.52க்கு விற்பனையாகும்.