இந்தியா

இந்தியா-சீனா: கிழக்கு லடாக்கில் இருந்து திரும்பும் படைகள்!

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் இரு நாடுகளுக்கும் (இந்தியா-சீனா) இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, எல்லையில் படைகளை திரும்பப் பெறும் பணி தொடங்கியுள்ளது.

கிழக்கு லடாக் செக்டாரில் உள்ள டெம்சோக் மற்றும் டெஸ்பாங் ஆகிய இரண்டு முக்கிய பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறுவதாக இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒப்பந்தத்தின்படி, இந்தப் பகுதியில் உள்ள ராணுவ தளவாடங்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்தியப் படைகள் திரும்பப் பெறுவது தெரியவந்தது. இந்தியப் படைகள் சார்டிங் லா கணவாய் அருகே ஆற்றின் மேற்குப் பகுதி நோக்கிப் பின்வாங்குவதாகவும், சீனப் படைகள் கிழக்குப் பக்கம் நோக்கிப் பின்வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இங்குள்ள கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளை இரு நாட்டு படைகளும் அகற்றி வருவதாக கூறப்படுகிறது. சுமார் 10-12 தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் 12 கூடாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு ரோந்து பணி மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!