புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

 

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கிட்டத்தட்ட ரூ. 2000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது. மேலும், இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய துறவிகள், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்களை அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேக தினத்தை ஒட்டி மத்திய பிரதேசம், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி புதுச்சேரி மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் நாளை விடுமுறை என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version