வெப்ப அலை அதிகரிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

 

ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,

 

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வட கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலையின் மோசமான தாக்கத்தை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளது.

 
 
 
Exit mobile version