இம்மாதம் 28ம் தேதி முதல் ரூ.500க்கு கேஸ் – மாநில அரசின் அதிரடி திட்டம்!!

 

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இம்மாதம் 28ஆம் தேதி முதல் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் வழங்க தெலங்கானா அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் மகாலட்சுமி என்ற புதிய திட்டத்தின் மூலம் பெண்கள் பெயரில் உள்ள கேஸ் இணைப்புகளுக்கு ரூ.500 சலுகை விலையில் வீட்டு உபயோக சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இதன்படி, இந்த புதிய திட்டம் டிசம்பர் 28ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தெலுங்கானாவில் மொத்தம் 1.20 கோடி கேஸ் இணைப்புகள் உள்ளன. பெண்களின் பெயர் கொண்ட கேஸ் இணைப்புகளுக்கு மட்டும் சலுகை விலையில் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆண்களின் பெயர் கொண்ட அனைத்து கேஸ் இணைப்புகளும் பெண்களின் பெயராக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கேஸ் ஏஜென்சி அலுவலகங்களிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

 
 
Exit mobile version