திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி சப்ரூம் என்ற இடத்தில் பாஜக சார்பில் நடைபெறும் ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார், அப்போது காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ராமஜென்ம பூமி வழக்கை நீண்ட காலமாக நீதிமன்றத்திலேயே இழுத்தடித்து வந்ததாக தெரிவித்தார்.
ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியதாகவும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும் என்றும், பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு, காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
