திகார் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்!

 

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்‍கில் அமலாக்‍கத்துறையினரால் கடந்த மாதம் 21 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

 

கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்‍கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அமலாக்‍கத்துறை காவல் இன்று நிறைவடைந்த நிலையில் அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், அவரை வருகிற 15 ஆம் தேதி வரை திஹார் சிறையில் காவலில் வைக்‍க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டார்.

 
 
 
Exit mobile version