
ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் மதியம் 12.30 மணிக்கு அவரது குடும்பத்தினரால் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ரத்தன் டாடாவின் பிபி மிகவும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் ஷாருக் அஸ்பி கோல்வாலா தலைமையிலான நிபுணர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து, அவ்வப்போது அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.