சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவ படையினர் குவிப்பு

 

கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

 

பம்பை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், நடைபந்தல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில், பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதினெட்டாம் படியிலும் துணை ராணுவ படையினர் பணி அமர்த்தப்பட்டனர்.

 
 
Exit mobile version