இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14 தேதி வரை நீட்டித்துள்ளது.
நாட்டில் குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டைத் தகவலை 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிப்பது அவசியமாகும். அந்த வகையில் மக்கள் தங்கள் ஆதாரில் உள்ள பெயர், முகவரி போன்றவற்றை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மாற்றி கொள்வதற்கு (14.12.2024 ) வரை அனுமதி அளித்து இருந்த நிலையில், மக்களின் நலன் கருதி தற்போது ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14 தேதி வரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
#UIDAl extends free online document upload facility till 14th June 2025; to benefit millions of Aadhaar Number Holders. This free service is available only on #myAadhaar portal. UIDAl has been encouraging people to keep documents updated in their #Aadhaar. pic.twitter.com/wUc5zc73kh
— Aadhaar (@UIDAI) December 14, 2024