முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
1991 முதல் 1996 வரை பி.வி.நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கியப் பங்காற்றினார்.
இது பொருளாதாரத்தில் அழியாத முத்திரையை பதித்தது. 2004 முதல் 2014 வரை சுமார் பத்து ஆண்டுகள் இந்தியப் பிரதமராக நாட்டிற்குப் பணியாற்றிய மன்மோகன் சிங், நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்களில் ஒருவர் ஆவார்.