நாட்டில் புதிதாக 628 பேருக்கு கொரோனா தொற்று..!

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 628 கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,054 ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் JN.1 வகை கொரோனா தொற்று 6 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளன, இதன் மூலம் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 69 ஆக உள்ளது. கேரளாவில் கோவிட் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனுடன், நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4.5 கோடி மற்றும் 4.44 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மொத்த மீட்பு விகிதம் 98.81% ஆக இருக்கிறது. மறுபுறம், இதுவரை மொத்தமாக 5,33,334 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர், இறப்பு விகிதம் 1.19 சதவீதம் ஆக உள்ளது.

 
 
Exit mobile version