அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட உள்ள 620 கிலோ மணி!!

 

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 620 கிலோ எடையுள்ள மணி நிறுவப்பட உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில், கோயிலில் நிறுவுவதற்காக தமிழகத்தில் இருந்து 620 கிலோ எடையுள்ள மணி தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜெய் ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

 
 
 
Exit mobile version