நாட்டில் புதிதாக 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், புதிதாக 602 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறியுள்ளது.

 

நாட்டில் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 440 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
 
Exit mobile version