மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் 56 அடி நீள கிரிக்கெட் உலகக் கோப்பை வடிவ மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதில் இந்தியா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்துகளுடன் குட் லக் இந்தியா டீம் என்ற வாசகத்துடன் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உதவியுடன், சுதர்சன் பட்நாயக் 500 ஸ்டீல் கிண்ணங்கள் மற்றும் 300 கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி ஆறு மணி நேரம் செலவழித்து இந்த மணல் சிற்பத்தை உருவாக்கினார்.