தற்போது உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும், பார்சல், டெலிவரி பெற்று சாப்பிடுவதற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா என ரித்தி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தின் குஜராத் அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தற்போது, இந்த வழக்கு விசாரணையின் போது தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளதாவது, மத்திய மறைமுக வரிகள் வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
ஒரு உணவகத்தின் பார்சல் மற்றும் டெலிவரி சேவைகள் அனைத்தும் ‘உணவக சேவைகள்’ பிரிவின் கீழ் தான் வரும் என்றும் இதன் அடிப்படையில் உணவகத்தில் சமைக்கப்பட்டு வழங்கப்படும் உணவுகளை உணவகத்திலேயே அமர்ந்து சாப்பிடுதல், பார்சல், டெலிவரி பெற்று சாப்பிடுதல் ஆகியவற்றிற்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது உணவகம் ஒன்றில் சமைக்கப்பட்ட உணவை உணவகத்திலேயே சாப்பிடுபவர்களுக்கும், பார்சல் எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கும், டெலிவரி பெற்று சாப்பிடுபவர்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.