புதிதாக 341 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!!

 

நாட்டில் மீண்டும் கொரோனா நெருக்கடி தலைதூக்கியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாடு முழுவதும் 341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கேரளாவில் அதிகபட்சமாக 292 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் புதிய துணை வேரியண்ட் ஜேஎன்1 இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 பேரும், மகாராஷ்டிராவில் 11 பேரும், கர்நாடகாவில் 9 பேரும், தெலுங்கானாவில் 4 பேரும், புதுச்சேரியில் 4 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுதவிர மற்ற மாநிலங்களில் இருந்து பத்து பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொரோனாவின் புதிய துணை மாறுபாட்டைக் கண்டறிந்ததை அடுத்து, மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களை எச்சரித்துள்ளது. விரைவில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
 
Exit mobile version