இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 50 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!