தேவையான பொருட்கள் :
- ஆட்டுக்கறித் துண்டுகள் – 500 கிராம்
- பெரிய வெங்காயம் – 2
- பூண்டு – 6 பல்
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய் – 6
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- வறுத்த சோம்புத்தூள் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
கறித்துண்டுகளை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் முக்கால் வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, சிகப்பு மிளகாய் போட்டு வதக்கி, கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.
கறி முழுமையாக வெந்ததும் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் இவற்றைப் போட்டு கிளறி விடவும்.
கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh