மத்திய சுகாதார அமைச்சகம் இன்று புதன்கிழமை (மே 18) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,829 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 2,549 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர். மொத்த மீட்பு விகிதம் சுமார் 98.75 சதவீதமாக உள்ளது.
நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 5,24,293 ஆக உள்ளது. இந்தியாவில், கொரோனா தொற்றால் முதல் மரணம் மார்ச் 2020 இல் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh