பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம், “தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh