
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரியகொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் 8ம் தேதி கலை, அறிவியல், தொழில்நுட்ப ,பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்லூரிகளில் மாணவர்கள் விடுதிகளும் செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.