Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

பொழுதுபோக்கு

சூப்பரான பன்னீர் குடமிளகாய் கிரேவி

20230607 145632

தேவையான பொருள்கள்

பன்னீர் – 200 கிராம்
குடமிளகாய் – 1
தக்காளி – 1
சிவப்பு மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் – 2 மேஜைக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிது

Advertisement. Scroll to continue reading.

தாளிக்க

எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது

Advertisement. Scroll to continue reading.

அரைக்க

தேங்காய் துருவல் – 50 கிராம்

Advertisement. Scroll to continue reading.

செய்முறை

பன்னீர், குடமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

Advertisement. Scroll to continue reading.

தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பனீர் துண்டுகளை போட்டு லைட் பிரவுன் கலர் வரும் வரை வதக்கி தனியே வைக்கவும்.

அடுப்பில் அதே கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போடவும். சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

Advertisement. Scroll to continue reading.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 அல்லது 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

Advertisement. Scroll to continue reading.

இப்போது சுவையான பன்னீர் குடமிளகாய் கிரேவி தயார்..!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventy eight − 76 =

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: