தேவையான பொருள்கள்
பன்னீர் – 200 கிராம்
குடமிளகாய் – 1
தக்காளி – 1
சிவப்பு மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் – 2 மேஜைக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிது
தாளிக்க
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
அரைக்க
தேங்காய் துருவல் – 50 கிராம்
செய்முறை
பன்னீர், குடமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பனீர் துண்டுகளை போட்டு லைட் பிரவுன் கலர் வரும் வரை வதக்கி தனியே வைக்கவும்.
அடுப்பில் அதே கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போடவும். சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 அல்லது 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான பன்னீர் குடமிளகாய் கிரேவி தயார்..!
