News

News

Thursday
June, 8 2023

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்.. இதோ எப்படி செய்வதென்று பாருங்க..!

- Advertisement -

கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக விளங்குகிறது.

ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். சரி, இப்போது கேழ்வரகு கூழ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Also Read:  சூப்பரான பன்னீர் குடமிளகாய் கிரேவி

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 4 கப்,

அரிசி நொய் – 2 கப்,

தயிர் – 3 கப்,

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும்.

Also Read:  பிரமாதமான சோளமாவு அல்வா செய்முறை

மறுநாள் மாலை ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் நொய்யைக் கழுவிப் போடவும். நொய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும்.

மறுநாள் காலை காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், சுவை அலாதியாக இருக்கும். தண்ணீருக்குப் பதில் மோர் ஊற்றியும் குடிக்கலாம்.

Also Read:  பிரமாதமான சோளமாவு அல்வா செய்முறை
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: