குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும் பன்னீர் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 100 கிராம்
மைதாமாவு – 2 மேஜைக்கரண்டி
சோளமாவு – 1 மேஜைக்கரண்டி
தயிர் – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
பிறகு பன்னீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பன்னீர் துண்டுகளை போடவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான பன்னீர் 65 தயார்…!