வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 115 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஓரளவு ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சர்வதேச சந்தைகளின் கலவையான சிக்னல்களுக்கு மத்தியில் இன்று காலை சந்தைகள் சீராக திறக்கப்பட்டன. இருப்பினும், கார் மற்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகளின் ஆதரவுடன் சந்தைகள் இறுதியாக லாபத்தில் முடிவடைந்தன.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 115 புள்ளிகள்‌ அதிகரித்து 76,520 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 23,205 புள்ளிகளில் நிலைத்தது.

பிஎஸ்இ சென்செக்ஸ்

அதிக லாபம் ஈட்டியவர்கள்:

அல்ட்ராடெக் சிமெண்ட் (6.81%), ஜொமாட்டோ (2.52%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (2.03%), சன் பார்மா (2.01%), டெக் மஹிந்திரா (1.86%).

அதிகம் நஷ்டம் அடைந்தவர்கள்:

பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-1.19%), கோடக் மஹிந்திரா வங்கி (-1.18%), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (-1.06%), ரிலையன்ஸ் (-1.05%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-0.97%).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!