மியூச்சுவல் ஃபண்ட் கூட்டுக் கணக்குகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை சந்தை கட்டுப்பாட்டாளர் செபி வெளியிட்டுள்ளது.
இந்தக் கணக்குகளுக்கு நாமினியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை விருப்பமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் செயல்முறையை எளிதாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தாங்கள் நாமினியைத் தேர்ந்தெடுத்தார்களா இல்லையா என்பதைத் தெரிவிக்க செபி கட்டாயமாக்கியுள்ளது.
அதற்கு இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன் எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால், காலக்கெடுவுக்குப் பிறகு நிதியை திரும்பப் பெற முடியாது.