X-ல் வரும் புதிய மாற்றம் – எலோன் மஸ்க் தகவல்..!

 

எக்ஸ் சமூக வலைதளத்தில் புதிதாக இணையும் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடவும், மற்றவர்களின் பதிவுக்கு பதிலளிக்கவும், லைக் மற்றும் புக்மார்க் செய்யவும் கட்டணம் வசூலிக்கவுள்ளதாக எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 

போலிக் கணக்குகளை கட்டுபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது, இந்த நடைமுறை நியூசிலாந்து, பிலிப்பைன்சில் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
 
Exit mobile version