பிளிப்கார்ட் மீண்டும் பிக் சேவிங் டேஸ் என்ற சிறப்பு விற்பனை மே 3 முதல் 9 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் இந்த விற்பனையில் பங்கேற்க ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 2ஆம் தேதி முதல் வாய்ப்பு அளிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படும். ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு தற்போது வழங்கப்படும் 5 சதவீத கேஷ்பேக் சலுகை இந்த விற்பனையிலும் பொருந்தும் என பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
எஸ்பிஐ கார்டு பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். யுபிஐ பேமெண்ட்டுகளுக்கு தள்ளுபடி வழங்குவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பே லேட்டர் ஆப்ஷன் மூலம் ரூ.1 லட்சம் வரை பெறலாம், இதனை தவணை முறையில் பணம் செலுத்தலாம் என்று பிளிப்கார்ட் விளக்கம் அளித்துள்ளது.