பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – கல்வித்துறை உத்தரவு

 

தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், “கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படுவதாக முதல்வர் தனிபிரிவில் 14417-ன் கீழ் புகார் பெறப்பட்டுள்ளது.

 

இந்தப் புகாரின் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளைத் தவிர்க்கவும், சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை அனைத்து தலைமையாசிரியர்களும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version