இன்றைய ராசிபலன் (02-05-2024)

 

இன்றைய நாள் (02-05-2024) :

குரோதி-சித்திரை 19-வியாழன்-தேய்பிறை

 

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

 

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30

 

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று அதிகாலை 12.28 வரை திருவோணம் பின்பு இரவு 11.03 வரை அவிட்டம் பின்பு சதயம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

மிருகசீருஷம், திருவாதிரை

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

மிதுனம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று மாணவ – மாணவியர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில், புதிய வாடிக்கையாளர்களைக் கவர சிலர் சலுகைகளை அறிவிக்க வேண்டி வரலாம். இதனால் லாபம் சற்று குறைய இடம் உண்டு. கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் எப்போதுமே கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில், யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். அரசியல்வாதிகள் பேச்சில் அதிக நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய நாள். விவசாயிகள் தங்கள் உழைப்பால் உயருவீர்கள். பெண்களைப் பொறுத்தவரையில் குடும்பச் செலவுகள் சற்று அதிகரித்துத் தான் காணப்படும். எனினும் நீங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள். வேலை அல்லது உத்யோகம் வழக்கம் போலவே இருக்கும்.

ரிஷபம்

வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று சிலருக்குப் பித்த சம்மந்தமான வியாதிகள் ஏற்படலாம். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வெளி இடங்களுக்குச் செல்லும் சமயத்தில் உங்கள் உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத கடன் ஏற்படாமல் இருக்க, செலவுகளை திட்டமிட்டுச் செய்யுங்கள். பிள்ளைகள் வழியில் சிலருக்குத் தேவை இல்லாத செலவுகள் அல்லது மனக் கவலைகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளைக் கடந்தே நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். உத்யோகத்தில் கூட வேலை பளு அதிகரிக்கலாம். மொத்தத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நாள் இந்த நாள்.

கடகம்

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சிம்மம்

எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.

கன்னி

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகை கைக்குவரும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

துலாம்

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

விருச்சிகம்

இன்றைய தினம், சுப காரிய பேச்சு வார்த்தைகள் பெரும்பாலும் நன்மை தரும். வீடு, வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். இதனால் சுப விரயங்கள் ஏற்படும். தொழிலை சிலர் நல்ல முறையில் அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் திறமையான வேலை ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கப்பெறும். உத்யோக ரீதியாக சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல பலன்களே ஏற்படும். அதிலும், பெண்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும் நல்ல நாள்.

தனுசு

இன்றைய தினம், தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவசியத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து அன்பு பாராட்டுவார்கள். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்து வரும். மொத்தத்தில், பெரும்பாலும் நன்மைகள் மேலோங்கும் நல்ல நாள் இந்த நாள்.

மகரம்

இன்றைய தினம், ஒருசில இடைத்தரகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொர்ப்ப லாபத்திற்காக உங்களை மோசமான திட்டங்களில் மாட்டி விடலாம். அதனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகரித்துக் காணப்படலாம். சிலருக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். சிலர் திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் அலைச்சல், உடல் சோர்வு அதிகம் காணப்படலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் காணப்படும். சில சமயங்களில் அதிக எதிர்மறை விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டி வரலாம். சற்று சோதனையான நாள்.

கும்பம்

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மீனம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரிகளுக்குத் தொழிலை விரிவுபடுத்தத் தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 
Exit mobile version