ஒருசமயம் பெருமாள் பக்தனான மன்னர் பத்மாட்சன் ஒரு நாள் அடர்ந்த காட்டிற்குச் சென்று தவத்தில் ஈடுபட்டார். தவத்தின் அருளால் காட்சியளித்த பெருமாள், அவரிடம்.. நீ விரும்பும் வரம் தருவதாக தெரிவித்தார்.
அதற்க்கு பத்மாட்சன் ‘எனக்கு லட்சுமி தாயார் மகளாக பிறக்க வேண்டும்’எனக் கேட்டார் .
எனவே பெருமாள் அவரிடம் ஒரு மாதுளம் பழத்தைக் கொடுத்து , ‘உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்’ என அருள்புரிந்தார்.
மன்னர் பெற்ற அந்த மாதுளை பழம் பெரிதாக வளர்ந்தது. வியப்படைந்த மன்னர் அதை பிளந்த போது, அதில் ஒரு புறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பதைக் கண்டார்.
மன்னர் தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்த குழந்தைக்கு ‘பத்மை’ என பெயரிட்டார்.
இதனடிப்படையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான மாதுளையை பிரசாதமாக படைத்து வழிபடுவோர்க்கு லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
