Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

ஆன்மீகம்

பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம்..!

20230304 192757

உலகில் எந்த ஒரு தூப தீபத்திற்கும் இல்லாத பெருமை பச்சை கற்பூரத்திற்கு உண்டு. கற்பூரம் ஒன்று தான் திடப் பொருளாக இருந்து திரவப் பொருளாக மாறாமலேயே ஆவியாக மாறும் தன்மை கொண்டது. வேறு எந்த திடப் பொருளுக்கும் இந்தத் தன்மை கிடையாது.

அந்த வகையில், வீட்டில் உள்ள தெய்வ சிலா ரூபங்களுக்குப் பச்சை கற்பூர அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம். பச்சை கற்பூரம் வாசனையை அதிகமாகத் தருவதினால் இதைக் கொண்டு வீட்டில் பூஜை செய்வதன் மூலம், வீடு முழுவதும் வாசனை பறவி துர்சக்திகள் அனைத்தையும் போக்கி நேர்மரை சிந்தனையை அதிகரிக்கும்.

Advertisement. Scroll to continue reading.

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாகக் கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து. பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்குப் பெரிய சக்தி இருக்கிறது.

பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும் என்கிறது ஆன்மீகம். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

Advertisement. Scroll to continue reading.

சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போகக் காரணமே வீட்டில் இருக்கக் கூடிய துர் சக்திகள் தான்.

பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்கக் கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும் என்பதாக ஆன்மீகம் பறைசாற்றுகிறது. அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்குமாம். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சைக் கற்பூரத்தை இடம் பெறச் செய்வது நல்லது.

Advertisement. Scroll to continue reading.

பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்துப் பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். இப்படிச் செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

வீட்டில் அதிகம் சண்டை வந்து கொண்டே இருக்கிறதா?!… கவலைப்படாதீர்கள் பச்சை கற்பூரத்தை பன்னீரில் முழுவதும் மூழ்கும் படியாகப் போட்டு பூஜை அறையில் வையுங்கள். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் குறையும். இப்படியாகப் பச்சை கற்பூரத்திற்கு ஏராளமான ஆன்மீக ஆற்றல்கள் உண்டு. இதனைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =

You May Also Like

ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, வேலைகள் சீராக நடக்க வேண்டும் என்றால் முதலில் குடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவைச் சிறப்பாகச் செரிப்பதற்கும், உடலால் ஊட்டச்சத்துக்களை...

தமிழ்நாடு

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,Advertisement. Scroll...

இந்தியா

கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...

தமிழ்நாடு

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக...

Advertisement
       
error: