Thursday, December 7, 2023
Homeஆன்மீகம்குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்!!
- Advertisment -

குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்!!

- Advertisement -

எந்த காரியம் செய்வதற்கு முன்பும் குலதெய்வத்தை வழிபாடு செய்வது முக்கியமானதாகும். பயணம் செல்வதற்கு முன்பு கூட குலதெய்வத்தை வணங்கினால் நம்முடைய குலதெய்வமே நமக்கு வழி துணையாக வரும்.

குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்வதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மைகளை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் பூஜை அறையில் எத்தனை சாமிகளின் படங்கள் இருந்தாலும் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படமும் இருக்கலாம்.

சில வீடுகளில் கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வாங்கி வந்து மாட்டி வைப்பார்கள். அவ்வாறு செய்வது தவறாகும் அந்த தெய்வங்களை சாந்தப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைவருக்கும் பூஜை செய்து வருதல் வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும் அதனால் உங்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

நம் முன்னோர்கள் பரம்பரை, பரம்பரையாக வழிபாடு செய்து வந்த தெய்வத்தை வருடத்திற்கு ஒருமுறையாவது வழிபாடு செய்து வந்தால் நோய்கள் அனைத்தும் தீரும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றார்களோ அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் குல தெய்வ வழிபாட்டினை பலர் மறந்து போய் விடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும்போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது.

குலதெய்வத்தின் அருள் கிடைத்தால் நாம் எத்தனை பெரிய காரியத்தையும் எளிதாக சாதித்து விட முடியும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் நம்மால் முன்னேற்றம் அடைய முடியாது.

ஒருவரின் குடும்பம் ஆல் போல் தழைக்க குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். ஆன்மீகப் பயணம் செய்து நீங்கள் எவ்வளவு பெரிய கடவுளை வழிபாடு செய்தாலும், குடம் குடமாக பாலபிஷேகம் செய்தாலும் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எனவே குலதெய்வ வழிபாட்டினை மறக்காமல் செய்து வருதல் வேண்டும்.

ஜாதகத்தில் குறைகள் இல்லாத நிலையில் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும், பிரச்சனைகளும் இருக்கின்றது என்றால் அதற்கு குலதெய்வத்தினை வழிபடாமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.

அதேபோல் கிரகங்களின் நல்ல பலன்களும் முழுமையாக ஒருவருக்கு பலன் தரவேண்டும் என்றால் குலதெய்வத்தின் அனுகிரகத்தை பெறுதல் வேண்டும். குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலும், திருமணம் தடைப்பட்டாலோ, புத்திர பாக்கியம் இல்லாமல் போனாலும், ஏதேனும் தீமைகள் ஏற்பட்டாலோ, குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதால் நிகழ்வது ஆகும்.

குலதெய்வத்தை சாந்தப்படுத்துவதற்கு நம் குலதெய்வத்தை வழிபாடு செய்து வந்தால் மட்டுமே நம்முடைய குறைகள் அனைத்தும் நீங்கும்.

வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசத்துடன் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜையை செய்ய வேண்டும். அமரும்போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள். உங்களின் உடம்பு பூமியில் படக்கூடாது.

உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள். அனைத்து குறைகளையும் குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும்.

நீங்கள் எங்கு சென்றாலும் குலதெய்வம் உங்கள் கூடவே வரும். நாட்கள் ஆக ஆக தான் குலதெய்வத்தின் அருமை உங்களுக்கு புரியும். உங்களின் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை ஏற்றுதல் வேண்டும். விளக்கின் திரி கிழக்கு முகமாக, அல்லது வடக்கு முகமாக இருக்க வேண்டும். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்பம் நல்ல முறையில் முன்னேற்றம் பெறும்.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகின்றார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விட முடியாது. குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

அமாவாசை அன்று உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று விளக்கு எண்ணெய் ஊற்றி இரண்டு மண் விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சை பழத்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்து வந்தால் நாம் நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். இந்த குலதெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சிறந்த பலன்களை பெறலாம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ fifty three = fifty five

- Advertisment -

Recent Posts

error: