இறைவனின் விக்கிரகங்களுக்கு :-
• பால் கொண்டு அபிஷேகம் செய்தால்: நீண்ட ஆயுள் கிடைக்கும்.
• நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தால்: சுகத்தைக் கொடுக்கும்.
• பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்தால்: மனதைப் பரிசுத்தம் செய்யும் அதனால் தீய எண்ணங்கள் வராது.
• பஞ்சாமிருதம் கொண்டு அபிஷேகம் செய்தால்: வெற்றியைத் தரும்.
• நெய் கொண்டு அபிஷேகம் செய்தால்: மோட்சத்தைத் தரும்.
• தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால்: மகப்பேறு தரும்.
• கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால்: ஆரோக்யத்தைத் தரும், நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயும் விலகும் என்பார்கள்.
• தேன் கொண்டு அபிஷேகம் செய்தால்: கலைவாணியின் அருளைப் பெற்றுத் தரும்.
• பழரசம் கொண்டு அபிஷேகம் செய்தால்: எம பயத்தை நீக்கும்.
• இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால்: உயர்ந்த பதவியைத் தரும்.
• சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால்: இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்யும்.
• கலசாபிஷேகம் கொண்டு அபிஷேகம் செய்தால்: அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தரும்.
• நல்ல வஸ்திரம் கொண்டு அணிவித்து மரியாதை செய்தால் : வறுமை நீங்கும்.