Saturday, January 25, 2025

பொடுகை போக்கும் பிரியாணி இலை ஹேர் பேக்..!

- Advertisement -

பொடுகுத் தொல்லை என்பது இப்போதெல்லாம் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, கெமிக்கல் ஷாம்புகளை பயன்படுத்துவதால், பலர் பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக சந்தையில் கிடைக்கும் பல்வேறு ஷாம்புகள் மற்றும் எண்ணெய்கள் பொடுகை குறைக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எத்தனை முயற்சி செய்தும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், பிரியாணி இலையுடன் இயற்கையான டிப்ஸை பின்பற்றுங்கள்.. பொடுகு நீங்கும்.

பிரியாணி இலையை வைத்து எப்படி பொடுகை போக்கலாம்?

- Advertisement -

பிரியாணி இலைகள் பொதுவாக உணவுக்கு சுவை சேர்க்கும். ஆனால் பிரியாணியில் உள்ள சில மருத்துவ குணங்கள் பொடுகை குணப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பிரியாணி இலைகள் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, உச்சந்தலையில் ஏற்படும் அழற்சி, அரிப்பு, சொறி, வறண்ட உச்சந்தலை போன்றவற்றையும் குறைக்கிறது. இப்போது பிரியாணி இலையில் ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதற்கு முதலில்.. பிரியாணி இலைகளை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இலைகள் முழுவதுமாக கொதித்ததும் ஆறவைத்து வடிகட்டி கொள்ளவும். மேலும், அதில் சிறிது வேப்ப எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் மற்றும் நெல்லிக்காய் தூள் சேர்த்து கலக்கவும். அதன் பிறகு, இந்த கலவையை தலையில் நன்கு தடவ வேண்டும். இப்படி ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பின் கால் மணி நேரம் உலர வைக்கவும்.

அதன் பிறகு, உங்கள் தலையை ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மாற்றம் தெரியும்.  இப்படி செய்து வந்தால், தொற்று நோய்களுடன், பொடுகு தொல்லையும் குறைந்து, முடி வலுவடையும். பொடுகு மட்டுமின்றி முடி உதிர்தலும் குறைகிறது.

- Advertisement -

குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!