தென் மத்திய ரயில்வேயில் எழுத்துத் தேர்வு இல்லாமல் 4232 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு.. முழு விவரம் இதோ..!

தென் மத்திய ரயில்வேயின் (SCR) கீழ் காலியாக உள்ள 4232 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மெக்கானிக், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், பெயிண்டர் மற்றும் பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.

கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு:

28 டிசம்பர் 2024 அன்று 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஓபிசி வேட்பாளர்கள் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://scr.indianrailways.gov.in/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 27 ஜனவரி 2025 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!